Monday, March 30, 2009

எம்வி கிறீன் ஓசியனில் மேலுமோர் பிரவசம்

கடந்த 28 ம் திகதி புதுமாத்தளன் யுத்த சூனியப்பிரதேசத்தில் இருந்து புறப்பட்ட எம்வி கிறீன் ஓசியன் கப்பலில் மேலுமோர் பிரசவம் இடம்பெற்றுள்ளது. புலிகளின் பிடியில் இருந்து வெளியேறிய யோகராசா மகேஸ்வரி என்ற பெண்ணே ஆண் குழந்தை ஒன்றை கப்பலில் பிரசவித்துள்ளார். இவரது பிரசவத்திற்கு கப்பலின் கப்டன் , பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மற்றும் அங்கிருந்த அனுபவம் மிக்க வயோதிபப் பெண்கள் உதவி புரிந்தாகவும் கப்பல் கரையை அடைந்ததும் தாயும் சேயும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment