Thursday, March 26, 2009

தென் மாகாண சபை மாணவர்கள் தாய்லாந்து சுற்றுப்பயணம்.

தென் மாகாண சபை முதல்வர் திரு-ஷான் விஜயலால் அவர்களின் ஏற்பாட்டில் மாகாணத்தில் கல்விப் பொதுத் தராதப் பரீட்சையில் கடந்த வருடம் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 12 மாணவர்கள் தாய்லாந்து சுற்றுப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் இன்று தமது பயணத்தை மேற்கொள்கின்றனர். இவர்கள் தமக்கான பயணச் சீட்டுக்களை இன்று பிரத மத்திரி ரத்னசிறி விக்கரமநாயக்க அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். இவ்வாறு கடந்த 2006, 2007ம் ஆண்டுகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு சுற்றுலா அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment