Monday, March 30, 2009

முல்லைத்தீவு-சாலை கடற்பரப்பில் பாரிய சமர் !



நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை முல்லைத்தீவு - சாலை கடற்பரப்பில் கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் பாரிய சமர் இடம்பெற்றுள்ளது. சிலாவத்தை மற்றும் சுண்டிக்குளம் கடற்படைத்தளத்தை சேர்ந்த கடற்படையணியிருக்கும் கடற்புலிகளுக்குமிடையில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற இம்மோதலில் புலிகளின் நான்கு படகுகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதுடன் 26 புலிகள் பலியாகியுள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இத்தாக்குதல் கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான மாறன் உட்பல பல முக்கிய உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளமை புலிகளின் தொடர்பாடலை ஒட்டுக்கேட்டபோது தெரியவந்துள்ளதாகவும் கடற்படையின் ஒருவர் உயிரிழந்தும் அதிகாரி ஒருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாகவும் அச்செய்தி தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment