Monday, March 23, 2009

பிரபாகரனால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்ப்பட்ட தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம் படையினர் வசம்.



கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் இரணைப்பளை பிரதேசத்தை கைப்பற்றிய படையினர் அங்கு புலிகளின் தலைவர் பிரபாகரனால் மிகவும் பிரமாண்டமாகவும் ஆடம்பரமாகவும் திறந்து வைக்கப்பட்ட தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலமைக் காரியாலயத்தைக் கைப்பற்றியுள்ளனர். இவ் ஆட்பதிவுதிணைக்களத்தை திறந்து வைத்த பிரபாகரன் முதலாவது அடையாள அட்டையை உத்தியோக பூர்வமாக பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கைப்ற்றப்பட்டுள்ள தமிழீழ ஆட்பதிவுத்திணைக்களத்தின் தலைமைக் காரியாலயத்தில் இருந்து வன்னி குடியிருப்பாளர்கள் பற்றிய சகல தகவல்களையும் பெற்றுக்கொள்ள இராணுவத்தினரால் முடிந்திருக்கும் என நம்ப்படுகின்றது.

இலங்கைநெற் வவுனியா நிருபர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com