Friday, March 27, 2009

ஏ-9 வீதியினூடாக 20 லொறிகளில் உணவு பொருட்கள்

வடக்கு வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் யாழ் குடாநாட்டுக்கு நேற்று வியாழக்கிழமை 20 லொறிகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஏ-9 வீதி வழியாக கொண்டு செல்லப்பட்டன.
அத்தியாவசிய பொருட்களுடன், குளிர்பானங்களும் எடுத்து செல்லப்பட்டுள்ளன. பொருட்களை இறக்கும் லொறிகளில் கொழும்பிற்கு திரும்பி வரும்போது குடாநாட்டு உற்பத்தி பொருட்களை கொண்டுவருமென யாழ். மாவட்ட செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடல் உணவுப் பொருட்களை ஏற்றி வருவதற்காக நான்கு குளிர் ஊட்டப்பட்ட வான்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment