திருமலைப் பகுதியில் நஞ்சு கலந்திருந்த பண்களைச் சாப்பிட்டதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் 80 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்குப்பட்டுள்ளனர். அவர்களில் 73 பேர் பாடசாலை மாணவ மாணவிகள் எனவும் 7 பேர் வளர்ந்தவர்கள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் இலங்கைநெற் க்கு தெரிவித்தன. அப்பிரதேசத்தில் உள்ள பேக்கரி ஒன்றின் பண்களைச்
சாப்பிட்ட அனைவரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர் தலைமறைவாகி உள்ளதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பேக்கரி சீல் வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment