Thursday, March 26, 2009

71 பொது மக்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

நேற்று இருபிரிவுகளாக வள்ளங்களின் உதவியுடன் புலிகளின் பிடியில் இருந்து வெளியேறிய மக்களை கடற்படையினர் மீட்டுள்ளனர். முதலாவது குழுவினரை நேற்றுக்காலை 6 மணியளவில் நான்கு வள்ளங்களுடன் பருத்துறைக் கடலில் வைத்து கடற்படையினர் மீட்டுள்ளனர். அவர்களின் 6 ஆண்கள் 9 பெண்கள் 11 சிறுவர் சிறுமிகள் என மொத்தம் 26 பேர் அடங்குவதாகவும் இரண்டாவது குழுவினர் பகல் 11 மணியளவில் புல்மோட்டைப் பிரதேசத்தை அடைந்ததாகவும் அவர்களில் 15 ஆண்கள் 17 பெண்கள் 13 சிறுவர் சிறுமிகள் என மொத்தம் 45 பேர் அடங்குவதாகவும் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com