Sunday, March 29, 2009

எம்வி கிறீன் ஓசியன் மூலம் புதுமாத்தளன் பகுதியில் இருந்து 15ம் தொகுதி மக்கள் திருமலை வந்தடைந்தனர்.



புதுமாத்தளன் யுத்த சூனியப் பிரதேசத்தில் உள்ள மக்கள் ஐசிஆர்சி உதவியுடன் கட்டம் கட்டமாக வெளியேறி வருகின்றனர். இம்மக்களை அங்கிருந்து வெளியேற்றும் கடமையில் ஈடுபட்டுள்ள எம்வி கிறீன் ஓசியன் கப்பல் நேற்று 15 ஆவது தடவையாக மக்களை ஏற்றிக்கொண்டு திருமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இக்கப்பலில் நேற்று 507 மக்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இவர்களில் 168 ஆண்களும் , 198 பெண்களும் 141 சிறுவர்களும் உள்ளதாகவும் அவர்களில் 132 பேர் நோயாளிகள் மற்றும் யுத்தத்தில் காயமடைந்தோர் என தெரியவருகின்றது. நோயாளிகள் உடனடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோர் இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.



No comments:

Post a Comment