Tuesday, March 31, 2009

புதுக்குடியிருப்பின் கிழக்கே புலிகள் ஆட்லறி தாக்குதல். 130 மிமி ஆட்லறி ஜெற் தாக்குதலில் நிர்மூலம்.



யுத்தம் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில் புலிகள் தமது உக்கிர எதிர்பைக் காட்ட நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என்பதை களநிலவரச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. இன்று முற்பகல் 11 மணியளவில் படையினரின் முன்னரங்குகளில் இருந்து 200 மீற்றர் தொலைவில் ஆட்லறிகளைக் கொண்டுவந்து நிறுத்திய புலிகள் படையினர் மீது கண்மூடித் தனமாக தாக்குதல் நடாத்த முற்பட்டுள்ளனர்.

அதேதூரத்தில் நிலைகொண்டிருந்த படையினரின் ஆட்லறி பிரிவினர் புலிகளின் ஒரு ஆட்லறி நிலையை தகர்த்ததுடன் விமானப்படையினரை உதவிக்கு அழைத்திருந்தனர். ஸ்தலத்திற்கு விரைந்த விமானப்படையின் ஜெற் விமானமொன்று மேலுமோர் 130 மிமி ஆட்லறியை நிர்மூலம் செய்துள்ளது.

No comments:

Post a Comment